politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

26.3.10

வெளிச்சத்திற்கு வந்த போலி மருந்துகள்


காலம் காலமாய் நம் நாட்டில் உலவி வந்துள்ள போலி மருந்துகளின் ஒரே ஒரு துளியை மட்டுமே பிடித்து இருக்கிறார்கள். நம் நாட்டில் உலவும் மருந்துகளில் ௪0% போலி மருந்துகள் தான் என்று அப்பொழுது ஜனாதிபதியை இருந்த அப்துல் கலாம் அவர்கள் தனது உரையிலே பதிவு செய்து இருக்கிறார். சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து அதன் ஒரு நுனியை மட்டும் இப்பொழுது வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். மேலும் இதன் ஒரு பகுதியை இயங்கி வரும் மருந்து நிறுவனங்களையும் சோதனை செய்வதன் மூலமே இந்த போலி மருந்துகளின் நடமாட்டத்தை குறைக்க முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
மொத்தத்தில் நம் நாட்டில் மருந்து துறையானது சுகாதார துறையின் கீழ் வராமல், எதோ ஒரு பெட்ரோல் மற்றும் ரசாயன துறையின் கீழ் வருவதினாலேயே இந்த அளவுக்கு ஊழல் மலிந்திருக்கிறது... இவை அனைத்தும் அதிகாரிகளின் ஆசிர்வாதத்துடன் தான் இத்தனை ஆண்டுகளாய் நடந்து வந்திருக்கிறது என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்... இந்த நிலையை மாற்ற மக்கள் அனைவரும்
௪௯ ஓ வை பதிவு செய்வதை தவிர வேறு வழி என்பது இல்லை....