politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

13.11.11

அருகி வரும் இனம் எது?

வழக்கமாய் அமெரிக்காவில் மட்டுமே வெளிப்படையாய், பெரும் பணக்காரர்களுக்கு பல சலுகைகள் அளித்து காப்பாற்றி வந்தனர்.

அதன் எதிரொலி தான் இன்று வால் தெரு முற்றுகை போராட்டம் என்பதை காண முடிகிறது..

இத்தனை ஆண்டுகளாய் இந்தியாவில் திரை மறைவில் நடந்த இந்த கூத்துக்கள், இன்று வெட்ட வெளிச்சமாய் அரங்கேறுமா என்ற எதிர்பார்ப்பு எனக்குள் எழுந்துள்ளது.

விஜய் மல்லய்யா என்ற மாபெரும் சக்தி இன்று தவறான பொருளாதார அணுகுமுறையால் பல கோடி ரூபாய்கள் கடனில் தத்தளிப்பதாகவும், அவர் அரசின் தவறான அணுகுமுறையால் தான் நஷ்டம் அடைந்தேன் என்று கூறி அரசின் கையை எதிர்பார்த்தும் காத்திருப்பதாக இந்து நாளிதழில் வெளிவந்துள்ள செய்திகள் குறிப்பிடுகிறது...

சுரண்டி கொழுத்ததால் வந்த ஆடம்பரம் இன்று மல்லய்யாவை ஆட்டம் காண வைத்தாலும், அரசு என்றும் போல் அவரை காப்பாற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை...

அமெரிக்காவில் உள்ள ஒரு பணக்காரர், என் ஊழியர்கள் கட்டும் வரியை விட, நான் குறைவாக கட்டுகிறேன் என்று கூறி...

பணக்காரர்கள் என்பவர்கள் அழிந்து வரும் இனமல்ல[Rich are not an endangered species], ஆகையால் அவர்களுக்கு உதவி தேவை இல்லை என்று வெளிப்படையாக கூறியதை நம் ஆட்சியாளர்கள் நினைத்து பார்ப்பார்களா என்பது கேள்விக் குறியே...

http://www.thehindu.com/news/national/article2622215.ece