politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

15.11.11

ஓ போடு

சென்னை மாநகரம் உருவாக்கும் குப்பைகளை கொண்டு அருமையாக சென்னை, மின்சார தன்னிறைவை அடையலாம் என்று தமிழ் நாட்டை சார்ந்த 81  வயதை எட்டியுள்ள ஒரு பொறியியல் வல்லுனரான திரு.சிவப்பிரசாத் குறித்து இன்று வெளியான டெக்கான் குரோனிகள் நாளிதழில் இரண்டாம் பக்கத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டின் அனைத்து துறைகளின் கதவுகளையும் தட்டி, எந்த விடையும் கிடைக்க வில்லை என்றாலும் விடாமல் தன முயற்ச்சியை தொடர்ந்த படி உள்ளார்.

இவரது தொழில் நுட்பப் படி மலேசியா அரசாங்கத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி எழுநூறு டன் எடையுள்ள குப்பைகளை கொண்டு எட்டு மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிகிறதாம்...

இதற்க்கு ஆகும் செலவுகள் குறித்து எந்த விதமான தகவல்களும் இல்லை.
1995  இல் நடைப் பெற்ற ஐ.நா ஆசிய பசிபிக் பகுதியின் சுற்றுச்சூழல் கூட்டத்தில் இந்த திட்டத்திற்கு அமர்க்களமான வரவேற்ப்பு கிடைத்தாக அந்த செய்தி குறிப்பு சொல்கிறது.
http://panchabuta.com/tag/k-s-sivaprasad/

சென்னையின் ஒரு நாள் குப்பையின் எடை 3200  டன் என்று  சென்னை மாநகராட்சியின் வலை தளம் அறிவிக்கிறது.
http://www.chennaicorporation.gov.in/departments/solid-waste-management/index.htm