politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

11.11.11

மால்குடி சித்தன்

நாடி ஜோதிடம், பழங்கால ரிஷிகள் எழுதிய ஓலை சுவடிகள் வைத்து எதிர்காலத்தை சொல்வார்கள். இவை பிரபலமான இடங்கள் வைத்தீஸ்வரன் கோவிலும் மற்றும் காஞ்சிபுரம்... இது மட்டும் அல்லாமல் பல்வேறு இடங்களில் கிளைகள் என்று வைத்து வியாபாரமும் காண கச்சிதமாய் நடந்து கொண்டிருக்கிறது...

சித்தனின் சிந்தனை என்ன என்றால்,

இவ்வளவு பழமை வாய்ந்த ஓலை சுவடிகளை ஏன் இன்னும் அரசாங்கத்தின் அங்கமான தொல்பொருள் துறை எடுத்துக் கொள்ளவில்லை?

தொல்பொருள் துறை இவ்விஷயத்தில் ஏதாவது முயற்சி எடுத்து இருக்கிறார்களா?

என் நண்பர் ஒருவர், பூகம்பம் போன்ற நிகழ்ச்சிகளை கூட கணித்து வைத்திருப்பார்கள் தானே என்று ஆய்வு செய்து கொண்டிருக்கிறாராம்...

நாடி ஜோதிடம் என்ற இந்த வித்தையை நான் நம்பவில்லை என்றாலும் இந்த கேள்விகள் என் மனதை துளைத்து கொண்டு இருக்கின்றன...

பதில்கள், பின்னூட்டம் இடுபவர்களுக்கு தெரிந்திருக்கும் என்ற நம்பிக்கையில்...

திருக்குறள் போன்ற பல பழம்பெரும் நூல்களின் மூல ஓலை சுவடிகள் அந்த ஓலை சுவடிகளின் கூட்டத்தில் இருக்கலாம் என்று யாருக்கும் இது வரை சந்தேகம் எழவில்லையா?