politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

10.9.13

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை....1

மீண்டும் என்னை எழுத வைக்கும் ரெவெரிக்கு என் நன்றிகள் 

திடீரென்று என் பழைய சிந்தனைகளை தூசி தட்டி பார்க்கையில் எழுத வேண்டும் என்று எண்ணி எழுத தொடங்கிய ஒரு கட்டுரை என்னை உறுத்தியது... நேரம் போதாமை ஒரு காரணம் என்றாலும் அதை அப்படியே கிடப்பில் போடவும் மனம் வரவில்லை..

இந்த கட்டுரைகள் ஒரு தொடராக வெளிவரும்... எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த கட்டுரையின் வளர்ச்சிக்கு உதவுவேன்.. 

இந்த கட்டுரைகள் குறித்து உங்களுடைய பார்வையை எனக்கு தெரிவிக்க இங்கு எந்த வசதியும் செய்து தரப் போவதில்லை... ஆனால் உங்கள் எண்ணங்களை ஒதுக்கும் எண்ணமும் எனக்கு இல்லை ஆகையால் உங்கள் பார்வைகளை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்... நேரம் கிடைக்கும் பொழுது உங்களுக்கு என் பதில் வரும்...

இனி தொடர் 

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை....

அரசியலில் என்று மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் இரண்டு அரசியல் ஒட்டி கொண்டே இருக்கும்... ஒன்று வலது மற்றொன்று இடது.. வலது அரசியல் சுயநலம் சார்ந்தது, கற்பனை வளம் கொண்டது, நேர்மறையாக பார்ப்பதாக கூறிக் கொண்டு சிலரின் முதுகை வளைத்து அதன் மீது ஏறி உச்சி செல்லும்... 
இடது அரசியல் பொது நலத்தில் சுயநலம் சார்ந்தது, உண்மையை பக்க பலமாய் கொண்டது, எதிர்மறை நோக்கி கொண்டே சரியான திசையில் செல்லக் கூடியது, யார் முதுகின் மீதும் ஏறாமல் அனைவரின் தோள் சேர்ந்து சரி சமமாக நிற்க கூடியது...

சிலர் நான் இடது பக்கம் செல்பவன் என்று கூறிக் கொண்டாலும் அவன் வலது பக்கமே சவாரி செய்வதை காண முடியும்..

கூடங்குளம் போராட்டம் நிலை என்ன?

இன்னும் பத்து நாட்களில் மின்சாரம் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சரும், நாற்ப்பது நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகும் என்று மத்திய அமைச்சரும், பதினைந்து முதல் முப்பது நாட்களில் தயாராகும் என்று அணு மின்சார துறை அதிகாரிகளும் கூறி இத்தோடு பல மாதங்கள் முடிவடைந்து விட்டது....

http://articles.economictimes.indiatimes.com/2012-05-06/news/31597557_1_kudankulam-nuclear-power-project-first-unit-second-unit

இடிந்தகரை மக்களும் மனம் துவளாமல் போராடிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. பதினோரு வருடங்களாக போராடி வரும் இரோம் ஷர்மிளாவை ஏறெடுத்து பார்க்காத மத்திய அரசு இந்த மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை ஏறெடுத்துப் பார்க்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்...

போபால் விஷ வாயுவால் பாதிக்கப் பட்ட மக்களை குறித்து கவலைபடாத இது வரை ஆட்சியில் இருந்த அனைத்து மத்திய அரசுகளும் கூடங்குளம் மக்கள் பாதிக்கப் படப் போவதை பற்றி அக்கறை கொள்ளாது என்பதும் அனைவரும் அறிந்தது தான்,,

இதற்கு நடுவில் இந்த போராட்டத்தை வைத்து யார் யார் என்ன என்ன அரசியல் செய்கிறார்கள் என்று ஒரு சிறிய பார்வையே இந்த தொடர்....