politics, critics of medias, and update of hot news

இந்தியாவில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் மற்றும் ஊடகங்களில் வெளிவரும் ஒவ்வொரு செய்திகளின் ஒரு விமர்சன தொகுப்பாக இந்த பக்கத்தை வடிவமைக்க விரும்புகிறேன்...

20.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 5

தொலைநோக்கு பார்வை இல்லாத அரசுகளின் காலடியில் இருந்து கொண்டு நம்மால் அணு மின் நிலையங்கள் இல்லாத ஒரு உலகத்தை நினைத்து பார்க்க முடியாது...

இது வரை ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருந்த கட்சிகளின் அரசியலை பார்த்து விட்டோம்... 

இவர்களுடன் சவாரி செய்து வந்த பல்வேறு சிறுகட்சிகளிடமும் அதே பார்வையை தான் நம்மால் உணர முடிகிறது... 

மொத்தத்தில் இவர்கள் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்துவதில் வல்லவர்களாய் உள்ளார்கள்....

நாலு பேர் நல்லா இருக்கணும்னா எதுவும் தப்பில்லை என்று உரைக்கும் நாயகனின் வசனத்தை இவர்கள் வெளிப்படையாய் சொல்லாமல் அனைவர் மனதிலும் ஏற்றி விட முடிகிறது....

சரி 

அரசியல்வாதிகளின் கண்களுக்கு ஓட்டு என்பது மட்டும் தான் கண்ணுக்கு தெரியும்... ஆகையால் அவர்களின் அரசியலை புரிந்து கொள்ள முடிகிறது... 

ஆனால் சில மெத்த படித்தவர்கள் கூடங்குளத்தை ஆதரிப்பது எதற்காக?

இந்த கேள்விக்கு விடை கிடைப்பது எளிதல்ல 

அறியாமை என்று கூற முடியாது...
தொலைநோக்கு பார்வை இல்லாதது என்றும் கூற முடியாது...

அது எது என்று ஆதரிக்கும் அவர்களுக்கு தான் தெரியும்...

மிகவும் பாதுகாப்பானது என்று ஏற்றுக் கொள்ளும் இவர்களால் ... ஒரு வேளை விபத்து ஏற்பட்டால் அணு உலை நிறுவனம் பொறுப்பல்ல என்று நமது பிரதமர் கிளம்பினால்.. ஒருவர் விடாமல் அது தவறு என்று பேசுவது தான் ஏனென்று புரியவில்லை?

அதான் விபத்தே ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறுகிறீர்களே பிறகு  ஏன் விபத்து காப்பீடு குறித்து யோசிக்க வேண்டும்...

18.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 4

பெரும்பான்மை பலம் உள்ள தேசிய கட்சிகளின் பார்வையை பார்த்து விட்டோம்...

இனி தமிழக கட்சிகள்...

தமிழகத்தில் இருக்கும் இரு பெரும் கட்சிகளுமே ஒன்றொக்கொன்று முரண்பட்ட கருத்தை தான் முன்வைக்கும்...

ஒன்று கிழக்கு என்றால் மற்றொன்று மேற்கு... 

ஒன்று பச்சை என்று சொன்னால் மற்றொன்று மஞ்சள் என்று சொல்லும்...

அப்படி பட்ட கட்சிகளிடம் கூடங்குளம் பட்ட பாடு, 

இருவருமே ஆதரிக்கும் ஒரு விஷயம்...

ஆகையால் எதிர்க்கிறார்களா? ஆதரிக்கிறார்களா? என்று மக்களால் புரிந்து கொள்ளவே முடியவில்லை... 

இவர்கள் இந்த திட்டத்தை எதிர்க்கவே இல்லை, மாறாக மக்களின் பயத்தை போக்குங்கள் பிறகு பார்க்கலாம் என்று வாதம் செய்து வந்தார்கள்.. 

காரணம் பெரிதாக ஒன்றுமில்லை...

இருளில் இருக்கும் தமிழகத்தின் வெளிச்சத்துக்கு நெடுங்கால பார்வை என்று யோசிக்க முடியாத வறட்சி... இப்போதைக்கு பிரச்சினை தீர்ந்தால் போதும் கை கழுவிக் கொள்ளும் எண்ணம்...

இவர்கள் கொடுக்கும் இலவச கருவி அனைத்தையும் இயக்கினால் எவ்வளவு மின்சாரம் தேவை என்று கணக்கிட்டு பார்த்திருந்தால் தமிழகம் கூடங்குளத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலையே வந்திருக்காது...

15.9.13

கூடங்குளம் - அரசியல் பார்வை... 3

வலது அரசியலின் நோக்கத்தை அசை போட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அப்படியே ஒரு எட்டு இடது அரசியலின் நோக்கத்தை பார்த்து விடுவோம்...

இடது அரசியல் என்பது பெரும்பாலான தொழிலாளர்களின் பலத்தில் இயங்குவது...

இவ்வுலகில் அதிகமான அளவில் இருப்பது தொழிலாளர்கள் என்பதாலும், இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும் பல்வேறு காரணங்களால் பிரிந்து பிளவுபட்டு இருப்பதால் இடது அரசியல் ஆட்சிக்கு வருவதற்கு ஒரு  பரந்த மனப்பான்மை உள்ள தலைவனால் மட்டுமே முடியும்...

ஆனால் பரந்த மனம் உள்ள தலைவர்கள் பல்வேறு காரணங்களால் முடிவெடுக்கும் நிலையில் இல்லாததால் குறுகிய மனப்பான்மை இங்கு ஓங்கி வளர்கிறது...

எவ்வளவுக்கு எவ்வளவு தொழிலாளர்களை சங்கத்தில் சேர்ப்பதின் மூலம் கட்சியின் பலத்தை உயர்த்திக் கொள்ள முடியும் என்ற குறுகிய மனம் உலக மக்களின் நன்மைக்கு சாவு மணி அடிக்கவே செய்கிறது...

கொக்கா கோலா நிறுவனம் அமைவதை எதிர்க்கும் அதே கட்சி வேறொரு இடத்தில் நடைபெறும் கொக்கா கோலா நிறுவனத்தில் தங்கள் தொழிற்சங்கத்தை வைத்திருக்கவே செய்கிறார்கள்..

ஒரு வேளை இந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய நிர்ப்பந்தம் வந்தால் தொழிலாளர்களை காப்பாற்றுவார்களா அல்லது இழுத்து மூட போராடுவார்களா என்ற கேள்விக்குறி பல நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது... கண்டிப்பாக அவர்களிடம் கேட்டால் இதற்கும் ஒரு பதில் இருக்கும்.. 


தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை மாசுகட்டுப்பாட்டு வாரியத்தால் இழுத்து மூடப் பட்ட பொழுது அதன் தொழிற்சங்கம் அதனை எவ்வாறு எதிர்த்தது என்று அனைவரும் அறிந்ததே...

ஆதலால் தொழிலாலர்களின் ஒருங்கிணைப்புக்காக இவர்களுக்கு தொழிற்சாலைகள் தேவைப் படுகிறது...

அப்படிப்பட்ட தொழிற்சாலையாகவே கூடங்குளம் அணுமின் நிலையங்களையும் இடது அரசியல் பார்க்கிறது...

12.9.13

கூடங்குளம்-ஒரு அரசியல் பார்வை... கொசுறு

லாபியிங் என்று எந்த நேரத்தில் நேற்று என் கட்டுரையை முடித்தேனோ.. இன்று காலை செய்தி தாளை பிரித்தால் தலை சுற்றுகிறது... 

குளிர்பதன பெட்டியில் நிரப்பப்படும் வாயு குறித்த செய்தி வெளியாகி உள்ளது... சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு சில அமெரிக்க நிறுவனங்கள் காப்புரிமை பெற்று இருக்கும் ஒரு வாயுவை குளிர்சாதனபெட்டியில் நிரப்புவத்தின் மூலம் புவி வெப்பமயமாவதை தடுக்க போவதாக அமெரிக்க அரசு கிளம்பி உள்ளது...

இதை நாடாளுமன்றமும் பாராளுமன்றமும் விவாத பொருளாக்கி பல்வேறு அமைச்சர்கள் முதற்கொண்டு எதிர்த்து விவகாரத்தை முடித்து விட்ட நிலையில், யாருடைய ஆதரவும் தேவை இல்லை என்று (அல்லது எப்படி ஆதரவு வாங்குவது என்று தெரிந்து விட்டதோ) தன்னிச்சையாக 2012 இல் நடந்த ஒரு சர்வதேச மாநாட்டில் இந்த திட்டத்தை ஆதரித்து இந்திய பிரதமர் கையெழுத்திட்டிருக்கிறார்.. இதனை தொடர்ந்து அனைத்து குளிர்சாதன பெட்டிகளிலும் இந்த வாயுவை நிரப்பி விற்கும் சட்டத்தை அமுல்படுத்துமாறு அமெரிக்கா நம் இந்திய அரசின் குரல்வளையை நெரிக்கிறது...


இரு பெரும் தேசிய கட்சிகளும் இவ்விஷயத்தில் எந்த வித்தியாசமும் காட்டுவதில்லை... எதிர்கட்சியை இருக்கும் பொழுது எதிர்ப்பதும் ஆளுங்கட்சியை இருக்கும் பொழுது நடைமுறை படுத்துவதும் தான் வரலாறு காட்டும் செய்தி... 


கூடங்குளம் மட்டுமே இதில் விதிவிலக்கு...

11.9.13

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை.... 2

முதலில் 
இரு பெரும் தேசிய கட்சிகள்..
இவர்களின் நோக்கம் என்ன?
அணு உலைக்கு ஆதரவாகவே இவர்களது நிலைப்பாடு உள்ளது ஏன்?

மேலே உள்ள கேள்விகளுக்கு பதில்

ப்ளுடோனியம்..

அணு ஆயுத தடை ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து அதாவது 1970 க்கு பிறகு அணு ஆயுதம் தயார் செய்ய தொழிற்சாலை அமைப்பது என்பது சர்வதேச அளவில் சட்டத்திற்கு புறம்பானதாகி விட்டது... ஆகையால் அணு ஆயுதம் தயாரிக்க மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகள் தேவைப் படுகிறது... ஒரு அணு ஆயுதத்தின் ஆயுள் அதன் பல்வேறு கட்டமைப்பை பொறுத்து 35 வருடங்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது... அப்படி பார்த்தால் 1970 க்கு பிறகு அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கும் எந்த நாடுகளிடமும் அணு ஆயுதம் இருக்கும் வாய்ப்பு இல்லை... (http://www.lanl.gov/quarterly/q_w03/shelf_life.shtml) ஆனால் இன்றும் 95 சதவிகித அணு ஆயுதங்கள் அமெரிக்காவிடமும் ரஷ்யாவிடமும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. 

அணு ஆயுதம் என்பது தீவிரவாதிகளின் கைகளில் விழுந்து விடக் கூடாது என்பதில் அனைத்து அரசுகளும் எச்சரிக்கையாகவே உள்ளதாக தெரிகிறது.. இணையத்தில் எதை தேடினாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அணு ஆயுதம் குறித்த முழு விவரங்களை தேடும் பொழுது தகர்ந்து விட்டது... தவறான கைகளில் இந்த அணு ஆயுதம் விழுவதை யாரும் விரும்பவில்லை என்று தெரிகிறது... 

கிடைத்த சில விஷயங்களை வைத்து பார்க்கும் பொழுது...

அணு ஆயுதத்திற்கு உதவும் ப்ளுடோனியம் தற்பொழுது இயற்கையாக கிடைப்பதில்லை...

அணு ஆயுதம் செய்ய உதவும் ப்ளுடோனியம் வகை தயாரிக்க தனி உலை அமைக்க முடியாத சூழ்நிலை..

சற்று சிரமம் உடைய வழிமுறை என்றாலும் மின்சார அணு உலைகள் உற்பத்தி செய்யும் ப்ளுடோனியத்தை வைத்து அணு ஆயுதம் செய்ய முடியும் என்று மின்சார அணு உலைகளை ஆதரிக்கும் திரு ரிச்சர்ட் கார்வின் அவரது ஆய்வறிக்கையில் தெரிவிக்கிறார்.



ஆக இந்திய நாட்டின் அணு ஆயுத தயாரிப்புக்கு அணு உலைகள் தேவை என்பதாலேயே இந்த இரு பெரும் கட்சிகளும் ஆதரிப்பதாகவே தெரிகிறது...

வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

அது என்ன காரணம் என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்... வால்மார்ட் ஒரு சட்டத்தை கொண்டு வருவதற்காக எவ்வளவு செலவு செய்தார்கள் என்பது சூடாக விவாதிக்கப்பட்டது...
இதற்கு அமெரிக்காவில் லாபியிங் என்று கூறுவார்கள்.. லாபியிங் என்பதற்கு இணையான தமிழ் பெயர் என்ன என்பதை கூகிள் மொழிபெயர்ப்பில் உள்ளிட்டு பார்த்தால் வியப்பு தான் மிஞ்சுகிறது...
[லாபியிங் = சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவை நாடுதல்]

இதற்கு இடையில் யாராவது நம் பாதுகாப்புக்கு அணு ஆயுதம் அவசியமே என்று யோசித்தால் அவர்களுக்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் உள்ளது...


10.9.13

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை....1

மீண்டும் என்னை எழுத வைக்கும் ரெவெரிக்கு என் நன்றிகள் 

திடீரென்று என் பழைய சிந்தனைகளை தூசி தட்டி பார்க்கையில் எழுத வேண்டும் என்று எண்ணி எழுத தொடங்கிய ஒரு கட்டுரை என்னை உறுத்தியது... நேரம் போதாமை ஒரு காரணம் என்றாலும் அதை அப்படியே கிடப்பில் போடவும் மனம் வரவில்லை..

இந்த கட்டுரைகள் ஒரு தொடராக வெளிவரும்... எனக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த கட்டுரையின் வளர்ச்சிக்கு உதவுவேன்.. 

இந்த கட்டுரைகள் குறித்து உங்களுடைய பார்வையை எனக்கு தெரிவிக்க இங்கு எந்த வசதியும் செய்து தரப் போவதில்லை... ஆனால் உங்கள் எண்ணங்களை ஒதுக்கும் எண்ணமும் எனக்கு இல்லை ஆகையால் உங்கள் பார்வைகளை என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள்... நேரம் கிடைக்கும் பொழுது உங்களுக்கு என் பதில் வரும்...

இனி தொடர் 

கூடங்குளம்- ஒரு அரசியல் பார்வை....

அரசியலில் என்று மட்டுமல்ல, அனைத்து விஷயங்களிலும் இரண்டு அரசியல் ஒட்டி கொண்டே இருக்கும்... ஒன்று வலது மற்றொன்று இடது.. வலது அரசியல் சுயநலம் சார்ந்தது, கற்பனை வளம் கொண்டது, நேர்மறையாக பார்ப்பதாக கூறிக் கொண்டு சிலரின் முதுகை வளைத்து அதன் மீது ஏறி உச்சி செல்லும்... 
இடது அரசியல் பொது நலத்தில் சுயநலம் சார்ந்தது, உண்மையை பக்க பலமாய் கொண்டது, எதிர்மறை நோக்கி கொண்டே சரியான திசையில் செல்லக் கூடியது, யார் முதுகின் மீதும் ஏறாமல் அனைவரின் தோள் சேர்ந்து சரி சமமாக நிற்க கூடியது...

சிலர் நான் இடது பக்கம் செல்பவன் என்று கூறிக் கொண்டாலும் அவன் வலது பக்கமே சவாரி செய்வதை காண முடியும்..

கூடங்குளம் போராட்டம் நிலை என்ன?

இன்னும் பத்து நாட்களில் மின்சாரம் கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சரும், நாற்ப்பது நாட்களில் மின்சாரம் உற்பத்தி ஆகும் என்று மத்திய அமைச்சரும், பதினைந்து முதல் முப்பது நாட்களில் தயாராகும் என்று அணு மின்சார துறை அதிகாரிகளும் கூறி இத்தோடு பல மாதங்கள் முடிவடைந்து விட்டது....

http://articles.economictimes.indiatimes.com/2012-05-06/news/31597557_1_kudankulam-nuclear-power-project-first-unit-second-unit

இடிந்தகரை மக்களும் மனம் துவளாமல் போராடிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது. பதினோரு வருடங்களாக போராடி வரும் இரோம் ஷர்மிளாவை ஏறெடுத்து பார்க்காத மத்திய அரசு இந்த மக்களின் உண்ணாவிரத போராட்டத்தை ஏறெடுத்துப் பார்க்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்...

போபால் விஷ வாயுவால் பாதிக்கப் பட்ட மக்களை குறித்து கவலைபடாத இது வரை ஆட்சியில் இருந்த அனைத்து மத்திய அரசுகளும் கூடங்குளம் மக்கள் பாதிக்கப் படப் போவதை பற்றி அக்கறை கொள்ளாது என்பதும் அனைவரும் அறிந்தது தான்,,

இதற்கு நடுவில் இந்த போராட்டத்தை வைத்து யார் யார் என்ன என்ன அரசியல் செய்கிறார்கள் என்று ஒரு சிறிய பார்வையே இந்த தொடர்....